சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி பவள விழா– முன்னாள் மாணவர் உரைத்தொடர் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இயற்பியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறை 17-07-2025 அன்று மாலை 3.30 மணிக்கு இணையவழி (virtual mode) மூலம் ஒரு சிறப்பு முன்னாள் மாணவி சொற்பொழிவுத் தொடரை சிறப்பாக ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வில் திருமதி கா. கார்த்திகா, இயற்பியல் துறையின் முன்னாள் மாணவியுமான இவர் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக (CEO) பணியாற்றி வருகிறார். “You can Ace the Race” என்ற தலைப்பில் அவர் வழங்கிய சொற்பொழிவு, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. தனது வாழ்க்கைப் பயண அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் வெற்றிக்கு உதவும் உன்னதமான தன்னம்பிக்கையும், செயல்முறைகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இயற்பியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஆர். கவிதா நிகழ்வுக்கு வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வு ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் கல்வி சமுதாயத்தினரால் ஆர்வமுடன் வரவேற்கப்பட்டது. இந்த நிகழ்வு, ஒரு வெற்றிகரமான முன்னாள் மாணவியுடன் மாணவிகள் நேரடியாக தொடர்பு கொண்டு ஊக்கம் மற்றும் வழிகாட்டுதல்களை பெறும் அரிய வாய்ப்பாக அமைந்தது.
திருமதி ஏ. புவனேஸ்வரி, இயற்பியல் துறையின் உதவிப் பேராசிரியர் நன்றி உரையாற்றினார். தமது பயனுள்ள, ஊக்கமளிக்கும் உரையிற்காக திருமதி கே. கார்த்திகாவிடம், இயற்பியல் துறை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. எதிர்காலத்தில் இத்தகைய மேலும் பல நிகழ்வுகள் நடத்தத் இயற்பியல் துறை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது.
குறிப்பு: இந்த சொற்பொழிவு, கல்லூரியின் பவள விழா (1951–2026) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பெண்கள் கல்வியில் 75 ஆண்டுகளாக ஒளி பரப்பும் சிறப்பை கொண்டாடும் வகையில் நடைபெற்றது.
Comments