Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிறுநீரகபாதை மீட்டு உருவாக்க அறுவைசிகிச்சை பயிலரங்கம்

திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை மற்றும் திருச்சிராப்பள்ளி சிறுநீரக அறுவை சிகிச்சை மன்றம் சார்பில்  சிறுநீரக பாதை மீட்டு உருவாக்க அறுவை பயிலரங்கு நடைபெற்றது.

சிறுநீர் பாதையில் ஏற்படும் சிதைவுகள் மற்றும் பிறழ்வு ஆகியவற்றை குணப்படுத்த செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை உலகின் மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் ஐஸ்வர்யா மருத்துவமனை மற்றும் செர்பியாவில் உள்ள மருத்துவர் ரேடோஸ் அவர்களில் மருத்துவமனையில் இருந்தும் செய்யப்பட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவ பயனரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதன் மூலம் பல நோயாளிகள் பலனடைந்துள்ளனர் இந்த பயிலரங்கத்தில் 150-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இதுபோன்று சிறுநீரக நீர் பாதை மீட்டு உருவாக்க பன்னாட்டு அறுவை பயிலரங்கம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். மேலும் மற்ற பல நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களும் பலன் பெறும்வகையில் இணையம் வழியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *