திருச்சிராப்பள்ளியில் உலக வெறிநாய் தடுப்பு தின விழிப்புணர்வு நடைப்பயணம்.
பெட் கேலக்ஸி நிறுவனர் மற்றும் திருச்சிராப்பள்ளி பட்டர்ஃபிளைஸ் ரோட்டரி கிளப்பின் தலைவர் எஸ். நித்யா அவர்கள் அற்புதமான வாக்கத்தான் 2025 நிகழ்வை RCT Next Gen,RCT, பஹர்திதாசன் பல்கலைக்கழகம் இணைந்து உலக வெறிநாய் தடுப்பு தினத்தை வெற்றிகரமாக அவர் செய்தார்.
இதில் 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நடைப்பயணம் ஸ்டூடண்ட்ஸ் சாலையில் தொடங்கி, வெஸ்டி பள்ளியில் நிறைவடைந்தது. வெறிநாய் கடியைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. நேஷனல் கல்லூரி,
காவேரி கல்லூரி, ஜோசப் கல்லூரி, மற்றும் ஜமால் முஹம்மது கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அங்கு நாய் கடிப்பதை எவ்வாறு தடுப்பது மற்றும் நாய் கடிக்குப் பிறகு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது பற்றிய அறிவிப்பு துண்டுப்பிரசுரத்தை விநியோகிப்பதன் மூலம் அறிவுறுத்தினர்.மேலும், பங்கேற்பாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஊமை நாடகமும் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், ரோட்டேரியன் ஜே. கார்த்திக், மாவட்ட ஆளுநர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், டாக்டர். பிரசன்னா பாலாஜி (நேஷனல் கல்லூரியின் துணை முதல்வர்) மற்றும் டாக்டர். கணேஷ் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அனைத்து மாணவர்களும் பங்கேற்பு சான்றிதழைப் பெற்றனர்.இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து, பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்திய அமைப்பாளர்களுக்குப் பாராட்டுகள்.
நிகழ்வின் இறுதியில் இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் காலை உணவு பழச்சாறு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.திருச்சி காவல் துறை/திருச்சி மாநகராட்சி பாதுகாப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments