Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் விழிப்புணர்வு பரப்புரை

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில்  ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
லஞ்ச ஒழிப்புத் துறையினர் பொதுமக்களிடையே லஞ்சம் கொடுப்பது குற்றம் வாங்குவதும் குற்றம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.
  சத்திரம் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்களுக்கு முன்னதாக கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு இசை நடனங்களும் நடத்தப்பட்டது. முன்னதாக லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்  துண்டுப் பிரசுரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் துண்டு பிரசுரங்களாக பொதுமக்களிடம் வினியோகித்தனர்.பறை இசையுடன் விழிப்புணர்வு  பரப்புரையில்  மாணவர்கள் ஈடுபட்டனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *