Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் கனமழை காரணமாக பள்ளி விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. சில பகுதிகளில் ஒரு வார காலமாக மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் திருச்சி , டெல்டா மாவட்டங்கள் உள்ளிட் 18 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துளளனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று(03.011.2021) ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை பொதுமக்கள் கவனமுடன் கடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *