Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

காலிவாளியுடன் சணல் சாக்கை கோவணம் கட்டிகொண்டு நூதன உண்ணாவிரதம்

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு  தலைமையில் விவசாயிகள் திருச்சியில் திருச்சி to கரூர் பைபாஸ் சாலை அருகில் அண்ணாமலை நகர், மலர் சாலையில் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள்  உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து 04.11.2021 வியாழக்கிழமை தீபாவளி இன்று 24ம் நாளான இன்று மத்திய மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தராததால் இன்றைய தீபாவளி தினத்தினை புறக்கணித்து, ஊருகெல்லாம் தீபாவளி

ஆனால், விவசாயிகளுக்கு வெறும் வாளி என்பதை சுட்டிக்காட்டி காலி வாளியுடன், புத்தாடை அணியாமல் சணல் சாக்கு மூலமான கோவணத்தை கட்டிக்கொண்டு நூதன  உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *