Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சாலையோர பெரிய மரம் விழுந்ததில் முதியவர் பலி

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மகாமுனி (60). திருமணமாகாத இவர் தன்னுடைய உறவினர் வீட்டில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்தார். இன்று அவர் காலை டீ குடிப்பதற்காக தன்னுடைய வீட்டின் அருகிலுள்ள டீ கடைக்கு வந்த அவர் அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த பழமையான பெரிய மரம் எதிர்பாராதவிதமாக பலத்த சத்தத்துடன் திடீரென மகாமுனி மீது விழுந்தது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் மரக்கிளையை தூக்கி மகாமுனி காப்பாற்ற முயன்றனர். ஆனால் மரம் விழுந்ததில் மகாமுனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அந்த மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து இடையூறு இருந்ததால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *