Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் யானை தந்தங்களை வைத்திருந்த இருவர் கைது

திருச்சி மாவட்டம் தேவராயநேரி நரிக்குறவர் காலனி பகுதியில் யானை தந்தங்கள் மறைத்து வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அப்பகுதியில் அவர்கள் சோதனை நடத்தினர்.

அங்கு அருண்பாண்டி மற்றும் செளந்தரராஜன் ஆகிய இருவரும் சிறிய அளவிலான 5 யானை தந்தங்களை மறைத்து வைத்திருந்தனர். 3 செ.மீ நீளமும், 1.5 செ.மீ அகலமும் உடைய இந்த தந்ததத்தைபறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் இவர்களுக்கு யானை தந்தம் எப்படி, யார் மூலம் கிடைத்தது, எங்கிருந்து வாங்கினார்கள் ஆகிய கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த யானை ததத்தை செதுக்கி நரி பல், சிங்கம் நகம் என விற்று வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *