Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் வெடி வெடித்த போது சிறுவன் விரல்கள் துண்டானது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கபட்டி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் நடைபெற்ற விழாவில் அப்பகுதி இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது பட்டாசு வெடித்த போது வெடிக்காமல் கீழே கிடந்த பட்டாசுகளை சூர்யா என்ற 16 வயது சிறுவன் கையில் வைத்திருந்த போது வெடி வெடித்தது.

இதில் சிறுவனின் கட்டை விரல், ஆள்காட்டி விரல்களை தவிர மற்ற மூன்று விரல்களும் துண்டாகி விட்டது. பின்னர் சிறுவன் சூர்யா சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸார் விசாரணை. மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *