Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வேட்பாளர் பண மோசடி திமுக பொறுப்பாளர் தாயுடன் தீக்குளிக்க முயற்சி

திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவரும், திருச்சி மாநகர மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளருமான ஜெயமோகன் என்பவரும், தற்போது திருச்சி மாநகராட்சி 36 – வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் என்பவரும் கடந்த 2012ம் ஆண்டு மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்த பணிகளை கூட்டாக மேற்கொண்டு உள்ளனர்.

இதில் தொழில் தொடங்க ஜெயமோகன் என்பவர் முதலீடாக சுமார் 12 லட்சம்  பணத்தை கார்த்திகேயனிடம் கொடுத்து உள்ளார். பின்னர் திமுகவைச் சேர்ந்த கார்த்திகேயனுடன் 2012-ல்  ஒப்பந்த  பணியிலிருந்து விலகினார். ஆனால் தான் கொடுத்த பணத்தை சுமார் 12- லட்சத்தை திருப்பி தராமல் கடந்த பத்து வருடங்களாக அலைக்கழிப்பதாக கூறியும், இதுகுறித்து திமுக தலைமைக்கும், மாவட்ட அமைச்சர் கே.என்.நேரு விடமும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 36-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார் கார்த்திகேயன். தற்போதும் பணம் தராமல் ஏமாற்றி வரும் திமுக மாநகராட்சி 36-வது வார்டு வேட்பாளர் கார்த்திகேயனை கண்டித்தும், திமுகவைச் சேர்ந்த தன்னையே ஏமாற்றி வரும் இவர் மக்களுக்கு எப்படி நல்லது செய்வார் என கூறியும்,

அவரிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தியும் திமுக மாநகர் மாவட்ட பொறியாளர் அணி துணைத் தலைவர் ஜெயமோகன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது தாயுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது காவல்துறையினர் தடுத்து ஜெயமோகனையும் அவரது தாயாரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *