Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ஐஷ்வர்யா மருத்துவமனையில் ஆண்கள் பிரத்யேக சிகிச்சை பிரிவு துவக்கம்

திருச்சியில் முதன்முறையாக உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனையில் ஆண்களுக்கான பிரத்யேக மருத்துவ சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ஆண்மை குறைவு ஆண்மை இயல் அறுவை சிகிச்சை பொது மருத்துவம் மற்றும் மனநலம் சார்ந்த நோய்களுக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிப்பார்கள் பிரிவு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படும் இந்த சிறப்பு பிரிவு தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக ஐஸ்வர்யா மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடக்க விழா நடைபெற்றது.

இதில் மருத்துவர் ராஜேஷ் ராஜேந்திரன் சிறுநீரகவியல் மற்றும் ஆண்மையியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சதீஷ் பொது மருத்துவர் மற்றும் மருத்துவர் விடுதலை வேந்தன் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் இப்பிரிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படும் விதமாக பேசினர். இந்த விழாவில் திருச்சி அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

விழாவில் சிறப்பு விருந்தினராக லயன்ஸ் மாவட்டம் 3 24fன் முன்னாள் ஆளுநர் லயன் எஸ் சுவாமிநாதன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆலோசகர் லயன் ஜோசப் அவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உறையூர் லயன்ஸ் சங்க உறுப்பினர்  முருகன்  ஒருங்கிணைத்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *