Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அடுத்தடுத்து டாஸ்மாக் கடையினை திறக்க எதிர்ப்பு – கவுன்சிலர் தலைமையில் முற்றுகை

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் சாலையில் ஏற்கனவே அரசின் இரண்டு டாஸ்மாக் மதுபானக்கடைகள் அருகருகே செயல்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக டாஸ்மாக் பாருடன் இணைக்கப்பட்ட மதுபானக்கடையினை திறக்க அரசும், மாவட்ட நிர்வாகமும், டாஸ்மாக் நிர்வாகமும் முயற்சித்து வருவதுடன்… நாளைய தினம் இதனை திறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகம் மிகுந்த பகுதியாக உள்ளதும், பெண்களுக்கான கடைகள் மற்றும் வணிகவளாகங்கள் நிறைந் பகுதியில், பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே புதிதாக திறக்கப்படும் கூடுதல் மதுபானக்கடையினால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படும் என்றும் எனவே மதுபானக்கடையினை திறக்கும் அரசின் முடிவைக் கைவிட வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சியான சிபிஎம் கட்சியின் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து புதிதாக திறக்கவுள்ள மதுபானக்கடையினை முற்றுகையிட்டு, கடையின் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பிய அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கடையினை திறக்கமாட்டோம் என உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றுகூறி தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அருகிலுள்ள இரு டாஸ்மாக் கடைகளையும் திறக்காமல் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *