Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சமயபுரம் கோயில் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி – திருவிழாவில் சோகம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை  தேர் திருவிழாவை காண வந்த சிறுவன் கோயில் தெப்பக் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வய்ரசெட்டி பாளையத்தை சேர்ந்த முத்தையன் குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை காண வந்திருந்தார்.

சமயபுரம் நால்ரோடு அருகே சமயபுரம் மாரியம்மன் கோயிலின் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்ப குளத்திலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்தி கடனாக பக்தர்கள் பால்குடம், அலகு குத்துதல், தீ சட்டி எடுத்தல் போன்றவைகளை எடுத்துச் சென்றனர். இதனை தெப்பகுளம் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முத்தையன் மகன் 10 வயதான பெரியசாமி என்ற சிறுவன், தெப்பக் குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால், அங்கிருந்த தீயணைப்பு படையினர் சிறுவனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, சமயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். தேர்த் திருவிழாவுக்கு வந்த சிறுவன் தெப்பக் குளத்தில் தவறி விழுந்து இறந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *