Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் 24 கிலோ புகையிலை பறிமுதல்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு நேற்று மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் ரயில் வந்தது. இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் பெட்டி ஒன்றில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட வெள்ளை நிற பாலீத்தின் பைகள் கேட்பாரற்று கிடந்தது.

அதை கைப்பற்றி திறந்து பார்த்தபோது அவற்றில் 24 கிலோ எடையுள்ள புகையிலை உலர் தளர்வான தூள் இருந்தது. இவற்றின் மதிப்பு 72 ஆயிரம் ஆகும். புகையிலைத் தூளை கடத்தி வந்த நபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரயிலில் போலீசார் நடத்திய சோதனையில் 39 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *