திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கையைச் சேர்ந்த 120 பேர், பிற நாடுகளைச் சேர்ந்த 40 பேர் என மொத்தம் 160 கைதிகள் உள்ளனர். இலங்கை கைதி ராஜன் என்பவரை பார்ப்பதற்காக அவருடைய மனைவி அனு அனுமதி கேட்டுள்ளார்.
ஆனால் அவருடைய ஆதார் அட்டையில் தந்தை பெயர் மட்டுமே உள்ளதாகவும், கணவர் பெயர் இல்லாததால் பார்க்க அனுமதி வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்ததாகவும், மேலும் கேட்டின் முன் நின்ற தன்னை காவலர்கள் இழிவாக பேசியதாகவும் ராஜனின் மனைவி அனு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தன் மனைவியை தரக்குறைவாக பேசியதால் ராஜன் அங்குள்ள மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வாசல் கதவுகளை தட்டி கதவை திறக்குமாறு சக கைதிகள் கூச்சலிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO







Comments