Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மணப்பாறை அருகே 16 வருடங்களுக்கு பிறகு மீன்பிடி திருவிழா

மணப்பாறை  அருகே மொண்டிப் பட்டி குளத்தில் 16-வருடங்களுக்கு பிறகு மீன்பிடி திருவிழா கோலாகலம், ஜாதி மத இன வேறுபாடின்றி ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்து சென்றனர்.

மணப்பாறை அருகே  உள்ள மொண்டிப்பட்டி கொண்டை மாலையம்மன் குளத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் வழிபாடு செய்த பின்னர் நாட்டாண்மை நாகராஜன் துண்டால் வெள்ளை வீசப்பட்டு மீன்பிடிவிழா தொடங்கியது. கண்மாயில் கூடியிருந்த ஆண், பொண்,சிறுவர் சிறுமியர்  அனைவரும் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர்.

மணப்பாறை பகுதி இந்த பெரிய குளத்தில் கடந்த 16 வருடங்களுக்கு பிறகு இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது, ஜாதி,மதம் பாராமல் அனைவரும்  ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெறும் மீன்படி திருவிழா மணப்பாறை மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம பொதுமக்கள் குளத்தில் குவிந்தனர்.

பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள்  ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை பயன்படுத்தி  மீன்பிடிக்கத்தொடங்கினர். அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி,கெண்டை,  ,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. கண்மாயில் பிடித்த மீன்களுடன் மகிழ்ச்சியில் வீட்டிற்க்கு கொண்டு சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *