Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் பூட்டிய தேவலாயத்தில் தீ விபத்து

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற புனித ஜான் பிரிட்டோ தேவாலயம் உள்ளது. மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி யுடன் இணைந்து செயல்பட்டுவரும் இந்த தேவாலயத்தில் சுப்ரமணியபுரம், டிவிஎஸ் டோல்கேட், கொட்டப்பட்டு, ஜெயில் கார்னர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கிறிஸ்துவ பக்தர்கள் வந்து வழிபாடு மேற்கொள்வர்.

இடையே இன்று இரவு 9.00 மணியளவில் திருப்பலி நிறைவு செய்து பின்னர் பங்கு மக்களை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றினர். பின்னர் தேவாலய ஊழியர்கள் கதவை சாத்திவிட்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் திருப்பலி பீடத்தின் பின்புறம் உள்ள அறையில் இருந்து புகை வெளியேறி பின்னர் தீகொழுந்து விட்டு எரிந்து வெளியே தென்பட்டது. வேகமாய் பற்றி எரிந்து அறையிலிருந்து தீ ஜன்னல் வழியாக வெளியே பரவியது.

தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். திருப்பலி நடைபெறும் மேடை மற்றும் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் முழுவதும் எரிந்து சாம்பலானது.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு ஏற்பட்டு அதன் பின்னர் அறையில் இருந்த கட்டுகட்டாக இருந்த மெழுகுவர்த்திகள் முழுவதும் பற்றி எரிந்ததால் இந்த விபத்து பெரிதாக ஏற்பட்டதாகவும், அதனாலேயே அணைக்க தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது. தீ விபத்து ஏற்பட்டால் தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் குவிந்ததால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *