திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம் இறப்பு எண்ணிக்கை இல்லை. ஏற்கனவே 242 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர்.
இன்று (01.07.2022) புதிதாக 67 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 14 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் மொத்தம் 295 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், முகக் கவசம் தனி மனித இடைவெளி கிருமி நாசினி கொண்டு கையை சுத்தப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments