Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் அதிமுகவினர் 400 பேர் மீது வழக்கு பதிவு

மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதில் மின் கட்டணம், சொத்து, வீட்டு வரி ஆகியவற்றை உயர்த்திய திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது, அனுமதி இல்லாமல் சாலையை மறித்து கைகளில் பேனர், கொடியுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக

கோட்டை காவல்நிலைய போலீசார் அதிமுக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *