Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் துறையூர் நகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாலக்கரை பகுதியில் வாகன சோதனையில்  பச்சபெருமாள்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஒட்டி வந்த காரில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையெடுத்து அவர் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவை கைப்பற்றி அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *