Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தீபாவளி பண்டிகையை கொண்டாடி வீடு திரும்பிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நெ1 டோல்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அவென்யூ ஓம் சக்தி நகரில் வசிப்பவர் செட்டியாபிள்ளையின் மகன் 60 வயதனா பெரியசாமி. இவருக்கு சுமதி என்ற மனைவியும்,செல்வக்குமார் என்ற மகனும் மற்றும் ரஞ்சனி என்ற மகளும் உள்ளனர்.

Advertisement

 இவர் நெ1 டோல்கேட் பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாட முசிறி வட்டம் புத்தனாம்பட்டி அருகே உள்ள சாத்தனூர் கிராமத்திற்கு தன் குடும்பத்துடன் கடந்த 14 தேதி புறப்பட்டு சென்றார். மீண்டும் குடும்பத்துடன் நேற்று இரவு நெ1 டோல்கேட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பெட்ரூமில் இருந்த பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 21 பவுன் தங்க நகை, ஒரு வெள்ளி காமாட்சி விளக்கு மற்றும் ரூ 10 ஆயிரம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிய வந்தது. 

Advertisement

கொள்ளையடிக்கப்பட வீட்டின் அருகே தனியார் மருத்துவமனையும், திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரியசாமி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *