Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

குடியரசு தின விழா – மண கோலத்தில் வந்து சான்றிதழ் பெற்ற அரசு ஊழியர்

நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர்  மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்ததற்கான 301 பேருக்கு நற்சான்றிதழை வழங்கி கௌரவித்தார். சமாதான புறா மற்றும் வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார். பின்னர் முதல்வரின் குடியரசு தின காவலர் பதக்கங்களை 98 பேருக்கு அணிவித்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒலி பிரிவில் பணிபுரிந்து வரும் செல்வமணி சிறப்பாக பணிபுரிந்தமைக்கான நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் திருமண கோலத்தில் வந்து பெற்றார். இறுதியாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *