Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் நாளை மறுநாள் (18.02.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி 110 கே.வி. துணை மின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை மறுநாள் (18.02.2023) (சனிக்கிழமை) திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஜங்ஷன் பகுதிகள். வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, புராமினேட் ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், வார்னர்ஸ் ரோடு, லாசன்ஸ் ரோடு, ரெனால்ட்ஸ் ரோடு,

கன்டோன்மெண்ட் பகுதிகள், மேலப்புதூர், புதுக்கோட்டை ரோடு மேம்பாலம் பகுதி, ஜென்னிப்ளாசா பகுதி, கான்வெண்ட் ரோடு, தலைமை தபால் நிலைய பகுதி, குட்ஷெட்ரோடு, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, வாலாஜா பஜார், பாண்டமங்கலம், வயலூர் ரோடு – வண்ணாரப்பேட்டை மற்றும் குமரன் நகர்,

சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு நாச்சியார் கோயில் கருமணடபம் இருபுறமும், பொன்னகர் ஆகிய பகுதிகளில் காலை 09:45 மணி முதல் 04:00 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மின் தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94987 94987 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *