Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாவட்டத்தில் நாளை மறுநாள் (21.02.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி அம்மாப்பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (21.02.2023) (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராம்ஜி நகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாப்போட்டை,

இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (21.02.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்தடை ஏற்படும்.

இதேபோல் தா.பேட்டைதுணை மின் நிலையத்திலும் நாளை மறுநாள் (21.02.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும், தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி,

நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர் புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம், பிள்ளா பாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளுர், மங்கலம், ஜம்பு நாதபுரம், திருத்தலையூர்,

சு.கோம்பை, நு.பாதர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் (21.02.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர்கள் முத்துராமன் (திருச்சி கிழக்கு), மேரிமேக்டலின்பிரின்சி (முசிறி) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *