Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மளிகை கடையில் போதைப் பொருட்கள் விற்றவர் கைது

திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் பகுதியில் மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளரை மணிகண்டம் போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்து சுமார் 40 கிலோ மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் தீனதயாளன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் மோகன்ராஜ் ( 26) இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

 இந்த நிலையில் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மணிகண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 அதன் அடிப்படையில் மணிகண்டன் போலீசார் கடையில் அதிரடி சோதனை ஈடுபட்டபோது 13 கிலோ எடை கொண்டகான்ஸ், 12 கிலோ கிராம் எடை கொண்ட கூல் லீப், மூன்று கிலோ எடை கொண்ட விஒன் டபாக்கோ,13 கிலோ எடை கொண்ட பான் மசாலா என மொத்தம் 40 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை கடையில் இருந்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 48 ஆயிரம் ஆகும்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மோகன்ராஜ் கைது செய்து மணிகண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *