Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தனியார் பேருந்துகள் போட்டி போட்டு இயக்கப்பட்டதில் ஒருவர் பலி

திருச்சி சத்திர பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி 2 தனியார் பேருந்துகள் போட்டி போட்டு வந்தது. அப்போது கண்டோண்மென்ட் பாரதியார் சாலை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஒரு பேருந்து அங்கு இருந்த பெட்ரோல் நிலையத்திற்குள் புகுந்தது.

நுழைவாயில் இரும்பு தூணில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையை உடைத்து சாய்த்தது. மேலும் பெட்ரோல் பங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு பேருந்தின் மீது மோதியதில் அப்பேருந்தும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் பெட்ரோல் பங்கு அருகே நடந்து சென்ற மோகன் என்பவர் பலியானார். இவர் தென்னக இரயில்வே துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். 35 வயதான இவர் அருகில் இருந்த கோவிலுக்கு குடத்தில் தண்ணீர் எடுத்துச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *