Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சாலை காட்டுக்குள் மறைந்த கார், ஆட்டோக்கள் – ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?

திருச்சி மாநகரில் விபத்துக்குள்ளான வாகனங்கள், ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், குற்ற செயல்களில் ஈடுபட்ட வாகனங்கள் என அனைத்தும் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தின் மதில் சுவர் அருகே சாலையின் ஓரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கார், ஆட்டோ என மூன்று வாகனங்கள் மீது முட்புதர்கள் நிரம்பி கிடக்கின்றன. தற்பொழுது கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் பாதாள சாக்கடை பணியின் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுப் பாதைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் கண்டோன்மெண்ட் காவல் நிலையம் அருகில் உள்ள போலீஸ் கிளப் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடது, வலது புறம் திரும்புவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மீது செடி கொடிகள் அடர்ந்து அடைந்து இருப்பதால் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்குமிடமாக மாறி உள்ளது. இதனால் காவல் நிலையத்திற்குள் விஷ பூச்சிகள் உள்ளே வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கவும், விபத்து ஏற்படாமல் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை எழுந்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *