Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி என் ஐ டி மாணவர் தற்கொலை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கணேஷ்புரம் பகுதியில் நேற்று காலை திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற ரயில் முன்பு படுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக பொன்மலை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி அவர் யார் என்ன விசாரனை செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இறந்தவர் திருச்சி மணிகண்டம் தீரன் மாநகரை சேர்ந்தவர் சத்தியசீலன் இவர் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர் இவரது மகன் அஜய் (26) என்பதும், இவர் திருச்சி என் ஐ டி கல்லூரியில் எம் டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நேற்று காலை திருவெறும்பூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்தவர் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அஜய் தனது நண்பருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார்.

அதில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் தனது ஏடிஎம், அதன் பின் நம்பர், பாஸ்புக் ஆகியவை வண்டியில் வைத்துள்ளதாகவும், தனது தாய், தந்தையிடம் சொல்லிவிடுமாறு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். பின்னர் திருவெறும்பூர் ரயில்வே ஸ்டேஷன் பேசிக்கொண்டு நடந்ததாக கூறப்படுகிறது. அப்படி சென்றவர் திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ரயிலின் முன்பு ரயில்வே டிராக்கில் படித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதை அவரது நண்பருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் அவரது பெற்றோருக்கு அவரது நண்பர் அனுப்பி உள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சத்தியசீலன் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் தனது மகனின் இருசக்கர வாகனம் நிற்பதை பார்த்து உள்ளார். இந்த நிலையில் மகனை காணாதது விசாரித்தப் பொழுது அப்பகுதி மக்கள் ரயில் முன்பு பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் சத்தியசீலன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பொழுது அது தனது மகன் அஜய் தான் என அடையாளம் காட்டி உள்ளார். பின்னர் பொன்மலை ரயில்வே போலீசார் அஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

என்ஐடி கல்லூரி மாணவர் ரயில் முன் படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் என் ஐ டி கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *