Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் – திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டியை சேர்ந்த அய்யாசாமி மகன் பாலச்சந்தர் (43). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், பாலச்சந்தருக்கு அவரது மனைவி மகாலட்சுமி இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பாலச்சந்தர் அவரது மனைவி மகாலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கொலை செய்தது தொடர்பாக, ஈச்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்வி அளித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலச்சந்திரனை சிறையில் அடைத்தனர்.

பின்னர் மனைவி மகாலட்சுமியை கொலை செய்த வழக்கு தொடர்பாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து மனைவியை கொலை செய்த வழக்கில் கணவர் பாலச்சந்தருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *