Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் கோபுரத்தில் விரிசல்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தற்போது நாம் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும்

திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசலில் உள்ள நுழைவுவாயில் கோவில் கோபுரத்தில் இரண்டு நிலைகளில் மேற்கூரை பூச்சுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

அபாயகரமான நிலையில் உள்ள இந்த கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரங்கள் மற்றும் மதில் சுவர்களை ஆய்வு செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 ரூபாய் 67 லட்சத்திற்குடெண்டர் கோரப்பட்டது யாரும் பணி செய்ய முன்வராததால் விரைவில் கோவில் நிர்வாகமே பணிகள் துவங்க உள்ளதாக இணை ஆணையர் சிவராம குமார் தெரிவித்துள்ளார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *