Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் மயங்கி விழுந்து பலி

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன், 63; காலை, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், இலவச வீட்டுமனை கேட்டு மனு கொடுக்க வந்தார். காலை 10:30 மணியளவில், அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வந்து கொண்டிருந்த போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்களும், போலீசாரும் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், சுவாமிநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, கண்டோன்மெண்ட் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஏற்கனவே, இரண்டு முறை மனு கொடுத்துள்ள சுவாமிநாதன், மூன்றாவது முறையாக மனு கொடுக்க வந்த போது, இறந்துள்ளார். அவர், ஏற்கனவே நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டவர், என்பதும் குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *