Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் – தொற்று நோய் பரவும் அபாயம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் அளுந்தூர் ஊராட்சி, ஶ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியம், திருச்சிராப்பள்ளி -620012. என்ற முகவரியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இங்கு குடியிருக்கும் நிலம் அரசு புறம்போக்கு நிலம்.இதில் சிலருக்கு இலவச வீட்டு மனை ஒப்படைப்பு நமூனா மற்றும் ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் G.R.T.பழனிசாமி என்பவர் தென்றல் நகர் பகுதியில் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து தனது சொந்த பயன்பாட்டிற்கு மண்சாலை அமைப்பதற்காக குடியிருப்பு மக்களின் வீடுகளின் ஓரங்களில் குழி பறித்து அதன் மண் மூலம் தனிமனித பயன்பாட்டிற்காக மண்சாலை அமைத்துள்ளார்.

G.R.T. பழனிச்சாமியால் குடியிருப்பு வீட்டின் ஓரங்களில் குழிபறிக்கப்பட்ட இடங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு பரவி, பல கொடிய நோய்கள் பரவ காரணமாக அமைந்துள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தலையிட்டு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *