Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அகல் விளக்கேற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலினுடைய கிழக்கு வாசல் கோபுரம் இடிந்து விழுந்து 6 மாதம் ஆகியும் சரி செய்யப்படாததைக் கண்டித்தும், உடனடியாக சரி செய்ய வலியுறுத்தியும், மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் சாத்தாரா வீதி பூ மார்க்கெட்டை புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இடத்திற்கு மாற்ற வலியுறுத்தியும்,

மேலும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கோரியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் பகுதி செயலாளர் ச.பார்வதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ். சிவா, ஏஐடியுசி பொதுச் செயலாளர் க.சுரேஷ், பொருளாளர் ராமராஜ், மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் க.இப்ராகிம், பொன்மலை பகுதிச் செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் சொக்கி.சண்முகம் நன்றி கூறினார். மேலும் விவசாய சங்க நிர்வாகி மணி மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *