Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் மேயர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 மற்றும் 5 வார்டு எண்.54, 55 மற்றும் 56 ஆகிய வார்டுகளுக்கு கருமண்டபம் ஆரோக்கிய மாதா பள்ளி மற்றும் மண்டலம் 2. வாடு எண் 30, 31 மற்றும் 50ஆகிய வார்டுகளுக்கு மீனாட்சி திருமண மண்டபத்தில் “மக்களுடன் முதல்வர்“’ சிறப்பு முகாம்களை  மேயர் மு. அன்பழகன், நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

“மக்களுடன் முதல்வர்“’ என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 மற்றும் 5 வாடு எண்.54,55 மற்றும் 56ஆகிய வார்டுகளுக்கு கருமண்டபம் ஆரோக்கிய மாதா பள்ளி மற்றும் மண்டலம் 2. வார்டு எண் 30,31 மற்றும் 50ஆகிய வார்டுகளுக்கு மீனாட்சி திருமணமண்டபத்தில் “மக்களுடன் முதல்வர்“’ சிறப்பு முகாம்கள் நடைபெற்ற முகாமை மேயர் மு. அன்பழகன், மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, உதவி ஆணையர் சண்முகம் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.      

இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் இம்முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள தெரிவித்தும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும் எளிதாகவும் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் என்ற  மேயர் தெரிவித்தார். 

“மக்களுடன் முதல்வர்“’ சிறப்பு முகாம்கள் நளை (30.12.2023)ம் தேதி மண்டலம் 5 , வார்டு எண் 24, 25மற்றும் 26 ஆகிய வார்டுகளுக்கு புத்தூர் பிஷப் கல்லுரி வளாகத்தில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *