ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது தாஜுதீன் (54). இவரதிருச்சி விமானநிலையத்திலிருந்து மலேசியாவுக்கு செல்ல தயாராக இருந்தார்.

அப்பொழுது இவருடைய உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் வாங்கி சோதனை செய்தனர். அப்பொழுது அவருடைய பிறந்த தேதி மற்றும் ஊர் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது. மேலும் போலி பாஸ்போர்ட்டில் முகமது தாஜுதீன் மலேசியா செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரிகள் முகமது தாஜு தீன்னை திருச்சி ஏர்போர்ட் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து தாஜுதீன் மீது ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments