Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பரிதாபமாக உயிரிழந்த மீன் வியாபாரி – போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சிலோன் காலனியை அண்ணாநகரை சேர்ந்தவர் முனியசாமி (55). இவர் இன்று நவல்பட்டு பகுதியில் இருந்து துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளே இருக்கும் பூலாங்குடி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் மீன் வியாபாரத்திற்காக சென்ற பொழுது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே முனியசாமி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிக்காமல் சென்று விட்டது. இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் முனியசாமி சாவுக்கு காரணமான வாகனத்தை பறிமுதல் செய்வதோடு வாகன ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வேலை செய்யாததால் முனியசாமி மீது மோதிய வாகனம் எதுவென்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்துவருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *