Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பொதுமக்களுக்கு பிரியாணி மற்றும் வேட்டி, சேலை வழங்கிய திருச்சி அதிமுகவினர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர் இப்ராம்ஷா தலைமையில், திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் நடைபெற்ற இந்த அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக மாநில மாணவரணி செயலாளர், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார் துவக்கி வைத்தார்.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, முட்டை, கேசரி உள்ளிட்ட உணவு வகைகளும், வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.பி குமார், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் எம்.பி ரத்தினவேல், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன்,

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, பொன்னர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *