திருச்சிராப்பள்ளியில் உள்ள பழமையான நிறுவனங்களை பார்வையிடுவதன் ஒருபகுதியாக திருச்சி வானொலி நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் நேற்று (16.05.2024) பார்வையிட்டார். திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியின் 86-வது நிறுவன நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி நேரலையில் நேயர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி வானொலி நிலையத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள தேசத்தலைவர்களின் அரிய உரை அடங்கிய ஒலி தொகுப்பை கேட்டு ரசித்தார்.

திருச்சிராப்பள்ளி மண்டல செய்திப்பிரிவின் செயலாக்கத்தையும் அவர் பார்வையிட்டு பணிகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வில், நிகழ்ச்சி பிரிவு தலைவர் பிரிஸில்லா. வரைதல் வழங்கல் அலுவலர் எஸ்.ஜான்சன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளியில் உள்ள புரதான கட்டடங்களை பார்வையிடுவதன் ஒருபகுதியாக இன்று (17.05.2024) செயின்ட் ஜோசப் கல்லூரியின் பழமையான கட்டங்களை பார்வையிட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், நேரில் பார்வையிட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           49
49                           
 
 
 
 
 
 
 
 

 17 May, 2024
 17 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments