Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பட்டப்பகலில் ஏழு சவரன் நகை திருட்டு – தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்.

திருச்சி மாவட்டம் புலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட வெள்ளகல்பட்டி பகுதியில் வசிப்பவர் தண்டாயுதம் (55). இவரது மனைவி சந்திரா இவர்களுக்கு நித்யா என்ற மகளும், ரமேஷ் என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

தோட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு கூலி வேலை செய்து வரும் நிலையில், நேற்று தண்டாயுதம் அவர் மனைவி சந்திரா, மருமகள் மீனா என்கிற காயத்ரி ஆகியோர் ஆடுகளை மேய்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். மீண்டும் மாலை வீடு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அலங்கோலமாக துணிகள் தரையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மருமகள் காயத்ரி நகைகளை பீரோவில் வைத்திருந்த நிலையில் அவர் நகையை தேடிப் பார்த்தபோது 7 சவரன் நகை மற்றும் ரொக்கம் 15,000 திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து மருமகள் காயத்ரியின் மாமனார் தண்டாயுதம் புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புலிவலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *