Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கம்பி அறுக்கும் எந்திரத்தில் 1.9 கோடி தங்கம்

வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு அதிக அளவு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானத்தில் வரும் பயணிகள் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது.

இந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.

இதில் அவர் இரும்பு கம்பியை அறுக்க பயன்படும் எந்திரத்தில் மறைத்து ஒரு கோடியே 19 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 666 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணிகள் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *