திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேட்டுப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (20). இவர் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இவர் படிப்பில் மந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தாய் நன்றாக படிக்க சொல்லி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி மாணவர் கார்த்திகேயன் மனவிரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 29 June, 2024
 29 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments