Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி சிக்கத்தம்பூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கத்தம்பூர் ஊராட்சியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா கார்த்திகேயன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 2000க்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் பழுது ஏற்பட்டால் அதை பராமரிக்கவும் மேலும் தமிழக அரசின் கலைஞரின்

கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு அரசு மானியம் வழங்கவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது. சிக்கத்தம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 36 பயனாளிகள் கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ரூபினி,

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நீலவேணி, கிராம செவிலியர் லதா மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி செயலர் ராஜேந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *