Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் டீ கடையில் நிறுத்திய பேருந்தில் 15 சவரன் நகை, பணம் கொள்ளை

கடந்த 24ம் தேதி கிளம்பாக்கத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு தனியார் ஆம்னி பேருந்தில் சென்னை பள்ளிக்கரணை மீனாட்சி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முல்லை ஈஸ்வரன் (27). இவர் தனது தாயுடன் பயணித்தார். அப்போது முல்லை ஈஸ்வரன் 15 சவரன் நகை, செல்போன், ரூ.3100 ஆகியவற்றை சூட்கேசில் வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து 25ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் திருச்சி – திண்டுக்கல் சாலை வண்ணாங்கோவில் அருகே உள்ள டீ கடையில் பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர் பயணிகள் பேருந்திலிருந்து இறங்கி டீ குடித்தனர். சுமார் 15 நிமிடங்கள் கழித்து பயணிகள் மீண்டும் பேருந்தில் ஏறினர். முல்லைஈஸ்வரன் பஸ்சில் ஏறி தனது இருக்கை பகுதிக்கு சென்றார். அப்போது, அங்கு வைக்கப்பட்டு இருந்த சூட்கேஸ் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த புகாரின்பேரில், ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது ஒரு வாலிபர் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *