Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற பிரபல ரவுடி உட்பட மூன்று பேரில் இருவர் கைது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் 15வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (54). இவர் கடந்த 9ஆம் தேதி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் வண்டியில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த திருவெறும்பூர் செல்வபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த விஷ்ணு (எ) வெங்கடேஷ் (27) இவன்மீது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரவுடி வழக்கு நிலுவையில் உள்ளது.

அவரது நண்பன் திருவெறும்பூர் மலைக்கோவில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தமிழழகன் (48 )மற்றும் அவர்களது நண்பன் ஒருவன் என மூன்று பேர் சேர்ந்து கடந்த 9ம் தேதி ஆறுமுகத்திலும் குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டி ஆறுமுகத்தின் செல்போனை அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் ஆயிரத்தையும் பறித்து கொண்டு சென்றுவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து ஆறுமுகம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணு (எ) வெங்கடேசன் மற்றும் தமிழழகன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்துதிருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களது மூன்றாவது நண்பன் ஒருவனை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *