Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ஊர் நாட்டாமை, திமுக பிரமுகர் படுகொலை.

திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிருதிவிராஜ் (வயது 48 ) உடற்பயிற்சி செய்யும் கர்லாக் கட்டையால் அடித்துக் கொலை. பிருத்திவிராஜுக்கும், அவரது சகோதரர் ரமேஷ் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பிரித்விராஜ் உள்ளிட்ட மூன்று பேர் அவரது வீட்டு மாடியில் உள்ள தனி அறையில் மது அருந்தி உள்ளனர். பின்னர் அந்த அறையில் ரத்த வெள்ளத்தில் பிரித்திவிராஜ் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரத்திவிராஜ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு குடும்பத்திற்குள்ளேயே தகாத உறவு இருந்ததாகவும், அதன் காரணமாக பிரித்விராஜ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *