Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி என்ஐடி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மாணவி மாயம்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரி மத்திய அரசின் மனித வளதுறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவ மாணவிகள் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும் வெளியில் அறைகள், வீடுகள் வாடகைக்கு எடுத்தும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15ம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்றவர் விடுதிக்கு திரும்பவில்லை அவரது செல்போன் எண்ணும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக என்ஐடி கல்லூரி பாதுகாவலர்கள் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி எங்கே சென்றார், என்ன ஆனார், அவருக்கு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? அல்லது யாரேனும் கடத்திச் சென்றார்களா? அல்லது காதலுனுடன் சென்று விட்டாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் என்ஐடி கல்லூரி விடுதி மாணவியரிடம் தற்காலிக பணியாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது விடுதி மாணவி ஒருவர் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *