Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் விபத்தில் சிக்கிய 2 குதிரைகள் – ஒரு குதிரை இறப்பு – மற்றொன்று உயிருக்கு போராட்டம்

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் யூனியன் ஆபீஸ் எதிரே மருங்காபுரியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஆல்டோ வகை காரில் இரண்டு குதிரைகள் மோதி விபத்து ஏற்பட்டது. 

இரவு நேரம் என்பதால் மணிகண்டம் யூனியன் ஆபீஸ் எதிரே எப்பொழுதும் எரியும் மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரியவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் இருட்டாக இருக்கின்றது 

அதிவேகத்தில் வந்த கார் இரண்டு குதிரைகள் மீது மோதி சம்பவ இடத்திலே இரண்டு குதிரைகளும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. குதிரைக்கு தண்ணீர் கொடுத்த நிலையில் பெண் குதிரை இறந்து விட்டது. 

ஆண் குதிரை தற்போது உயிருக்கு போராடிய கொண்டு உள்ளது. தற்போது மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *