Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 2 கடைகள் சீல் – 24 கிலோ குட்கா பறிமுதல் – சகோதரர்கள் 3 பேர் கைது

பழைய கரூர் ரோடு நடுத்தெருவில் பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து மேற்கண்ட இடத்தில் குடியிருந்து வரும் சகோதர்ர்கள் மனோகர் மணி மற்றும் ராஜா ஆகிய மூன்று சகோதர்ரகளின் இரண்டு கடைகள் மற்றும் வீடு ஆகியவைகளை ஆய்வு செய்த போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை புகையிலை பொருட்கள் சுமார் 24 கிலோ இருப்பது கண்டறிந்து பறிமுதல் செய்யபட்டு வழக்கு போடுவதற்காக மூன்று சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவர்கள் மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பறிமுதல் செய்யபட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் மற்றும் இரண்டு வாகனங்களும் மேல்நடவடிக்கைக்காக திருச்சிராப்பள்ளி மாநகர கோட்டை கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.

இந்த ஆய்வின்போது கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி மற்றும் தாசில்தார் சக்திவேல்முருகன் மற்றும் வருவாய் ஆய்வாளர் K.ராமர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களாகிய செல்வராஜ், மகாதேவன், அன்புச்செல்வன், கந்தவேல் மற்றும் ஆயுதப்படை காவலர்களும் உடனிருந்தனர்.

மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு கூறுகையில்…… திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களோ அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களோ அல்லது சுகாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய ய வருமாயின் கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தகவல் எணிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும் டும் என்றும், தகவல் அளிப்போரின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார்.

மாவட்ட புகார் எண் : 96 26 83 95 95

மாநில புகார் எண் : 94 44 04 23 22

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *