வணிக கட்டிடங்களுக்கு வாடகையுடன் சேர்த்து 18 சதவீதம் ஜிஎஸ்டிவரி என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கத்தை சார்ந்தவர்கள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments