திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து மாரிஸ் மேம்பாலத்தின் அருகே பிரதான குடிநீர் உந்து குழாய் செல்கிறது. தற்போது மாரிஸ் பாலத்தின் விரிவாக்கம் பணி நடைபெற்று வருவதால்,

அதன் அருகே செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாய் இடையூறாக உள்ளதால் அதனை இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இப்பணி (09.01.2025) அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் (09.01.2025) ஒருநாள் இருக்காது.

மறுநாள் (10.01.2025) அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments